அயோத்தி உள்ளிட்ட சர்ச்சைக்குரிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் - வரும் 17ம் தேதி பணி ஓய்வு பெறுவதையொட்டி இன்று மாலை பிரிவு உபச்சார விழா
Nov 15 2019 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தி உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய், பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், இன்று மாலை அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது.
உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக, திரு. ரஞ்சன் கோகோய், கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். வரும் 17ம் தேதி பணி ஓய்வு பெற உள்ள கோகோய், இன்று தனது கடைசி நாள் பணியை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில், இன்று காலை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாலையில் பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது. திரு. ரஞ்சன் கோகோய் பணி ஓய்வையொட்டி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு திரு.எஸ்.ஏ.பாப்டேவை நியமித்து, குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார். எஸ்.ஏ.பாப்டே வரும் 18-ம் தேதி, பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.