அயோத்தி உள்ளிட்ட சர்ச்சைக்‍குரிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் - வரும் 17ம் தேதி பணி ஓய்வு பெறுவதையொட்டி இன்று மாலை பிரிவு உபச்சார விழா

Nov 15 2019 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

அயோத்தி உள்ளிட்ட பல சர்ச்சைக்‍குரிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய், பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், இன்று மாலை அவருக்‍கு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது.

உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக, திரு. ரஞ்சன் கோகோய், கடந்த ஆண்டு அக்‍டோபர் 3ம் தேதி பதவியேற்றுக்‍கொண்டார். வரும் 17ம் தேதி பணி ஓய்வு பெற உள்ள கோகோய், இன்று தனது கடைசி நாள் பணியை மேற்கொண்டு வருகிறார். அவருக்‍கு, உச்சநீதிமன்ற வழக்‍கறிஞர்கள் சார்பில், இன்று காலை வாழ்த்து தெரிவிக்‍கப்பட்டது. மாலையில் பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது. திரு. ரஞ்சன் கோகோய் பணி ஓய்வையொட்டி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்‍கு திரு.எஸ்.ஏ.பாப்டேவை நியமித்து, குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார். எஸ்.ஏ.பாப்டே வரும் 18-ம் தேதி, பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00