அயோத்தி அறக்கட்டளைக்கு புதிய சட்டம் தேவையில்லை : உச்சநீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படும்: மத்திய அரசு
Nov 15 2019 2:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளை தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வர தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்டலாம் என்றும், கோவில் கட்டுவதை பார்வையிட அறக்கட்டளை ஒன்றை மூன்று மாதங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசு அதிகாரி ஒருவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளைக்காக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்றும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.