மஹாராஷ்டிராவில் அமலானது குடியரசு தலைவர் ஆட்சி : ஆளுநரின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்
Nov 13 2019 7:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மஹாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வந்தது. பா.ஜ.க., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க வரும்படி ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரி தனித்தனியே அழைப்பு விடுத்தார். ஆனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.
இதையடுத்து, அரசியல் சாசனப்படி, மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஏதுவான சூழல் இல்லாததாகவும் அதனால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படியும், மத்திய அரசுக்கு ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார். ஆளுநரின் பரிந்துறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு பரிந்துறைத்தது. இதனை தொடர்ந்து மத்திய அரசின் பரிந்துறைப்படி குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் உத்தரவிட்டதையடுத்து, மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.