அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு : வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஓவைசி மீது வழக்கு
Nov 12 2019 6:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, அசாதுதீன் ஓவைசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர்கோயில் கட்ட அனுமதி வழங்கி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல் மசூதி கட்டிக் கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்தியிலேயே 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த, இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.அசாதுதின் ஓவைசி, அயோத்தி வழக்கின் தீர்ப்பின் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தார். மேலும், உச்சநீதிமன்றம் வழங்க உத்தரவிட்ட 5 ஏக்கர் நிலத்தை இஸ்லாமியர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், அயோத்தி தீர்ப்பு குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஓவைசி மீது, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பவன்குமார் என்ற வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் அசாதுதின் ஓவைசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.