பல்லாயிரக்கணக்கான மக்களுடன் தகுந்த நேரத்தில் புத்த மதத்தில் இணையப்போவதாக மாயாவதி தகவல்
Oct 15 2019 9:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பல்லாயிரக்கணக்கான மக்களுடன் தகுந்த நேரத்தில் புத்த மதத்துக்கு மாற உள்ளதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், அண்ணல் அம்பேத்கர், புத்த மதத்துக்கு மாறினார் என்றும், தாமும் புத்த மதத்திற்கு மாறப் போவதாகவும் கூறினார். இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து அவர்களுடன் மதம் மாறப்போவதாகவும் கூறினார். ஆனால் அதற்கு சரியான காலம் வர வேண்டும் என தெரிவித்த மாயாவதி, அம்பேத்கரை பின்பற்றுபவர்களால் இத்தகைய மதமாற்றம் என்பது சாத்தியமானதுதான் என்றும் தெரிவித்தார்.