அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை கடைபிடிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி
Sep 17 2019 7:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை கடைபிடிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மத்திய அரசின் வெளியுறவு கொள்கை குறித்து அத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் விளக்கினார். இந்தியாவின் குரல் சர்வதேச அளவில் ஓங்கி ஒலித்து வருவதாகவும், யோகா உள்ளிட்ட இந்திய கலாச்சார நிகழ்வுகள் சர்வதேச அளவில் போற்றப்படுவதாகவும் தெரிவித்தார். வெளியுறவு கொள்கையை பொறுத்தவரை, அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை கடைபிடிக்க வேண்டும் என்பதே முக்கியமாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறிய திரு.ஜெய்சங்கர், எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாதவரை பாகிஸ்தான் உடனான உறவை பேணுவது என்பது கடினமாக இருக்கும் என மறைமுகமாகக் குறிப்பிட்டார்.