பிறந்தநாள் கொண்டாட்டம் - குஜராத்தில் பிரதமர் மோடி - பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு பிரதமர் மோடி உற்சாகம் சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டார் பிரதமர்
Sep 17 2019 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை, முழு கொள்ளளவை எட்டுவதை பார்வையிட்ட பிரதமர் திரு. மோடி, கெவடியாவில் உள்ள பட்டம்பூச்சி பூங்காவில், பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தமது பிறந்தநாளை ஒட்டி, தாயார் ஹீராபென்னிடம் வாழ்த்துபெற குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அம்மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
நர்மதா மாவட்டத்தில் கெவடியாவில் உள்ள கால்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்தை பார்வையிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, அங்குள்ள பூங்காவில், நடைபயணம் மேற்கொண்டார். வண்ணத்துப்பூச்சி பூங்காவை பார்வையிட்ட அவர், அங்கு வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் கெவடியாவில் உள்ள முக்கிய அணையான சர்தார் சரோவர் அணை, முழு கொள்ளளவை எட்டியதை பிரதமர் மோடி பார்வையிட்டார். சர்தார் சரோவர் அணை, முழு கொள்ளளவை எட்டுவது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்பதால், அதை குறிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நமாமி தேவி நர்மதே திருவிழா'வில் பிரதமர் கலந்து கொண்டு நர்மதா ஆரத்தியை நிகழ்த்த உள்ளார்.