மேற்குவங்கத்தில் நடந்த சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு - கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையருக்கு சி.பி.ஐ சம்மன்
Sep 17 2019 12:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கை விசாரித்து வந்த கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் திரு. ராஜீவ் குமார் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சி.பி.ஐ. ஏற்னெவே சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. தற்போது மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் ராஜீவ் குமாருக்கு மீண்டும் சம்மன் வழங்க நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் மாநில தலைமை செயலகத்துக்கு சென்றனர். பின்னர் ராஜீவ் குமார் எங்கு உள்ளார் என்பது குறித்த விவரம் கேட்டு தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர்களிடம் கடிதம் அளித்தனர்.