இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறது பாகிஸ்தான் - அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Aug 20 2019 9:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வன்முறையை தூண்டி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான தொலைபேசி உரையாடலின்போது இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி நேற்றிரவு தொலைபேசி வாயிலாக பேசினார். 30 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின்போது, இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய அமைதி குறித்து பேசும் போது, இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில், பிராந்தியத்தில் சில தலைவர்கள் பேசுவது அமைதிக்கு உகந்தது இல்லை என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை மறைமுகமாக குறிப்பிட்டார். காஷ்மீர் பகுதியை பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லா பிரதேசமாக மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் டிரம்பிடம் மோடி எடுத்துரைத்துள்ளார்.