கர்நாடகாவில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82-ஆக உயர்வு - நிவாரணப் பணிகள் சரிவர நடைபெறாததால் பல்லாயிரக்‍கணக்‍கான மக்‍கள் தவிப்பு

Aug 20 2019 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82-ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் முக்‍கிய நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை குறைந்து, வெள்ள நீர் வடியத் தொடங்கியதால், மக்கள் நிவாரண முகாம்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். எனினும், நேற்றிரவு நிலவரப்படி 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். இதற்கிடையே, வெள்ளப் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82-ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் மாயமாகியுள்ளனர். நிவாரணப் பணிகள் சரிவர நடைபெறாததால் பல்லாயிரக்‍கணக்‍கான மக்‍கள் தவித்து வருகின்றனர்.

வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளுக்காக கர்நாடக அரசு 195 கோடி ரூபாயை அறிவித்துள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00