செப்டம்பர் 7-ல் நிலவில் தரை இறங்கும் என தனது பயணம் குறித்து தகவல் அனுப்பிய சந்திரயான்-2
Aug 18 2019 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில், தான் தரையிறங்கப்போவதாக சந்திரயான்-2 விண்கலம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான விவரங்களை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், சந்திரயான்-2 விண்கலம், தனது விண்வெளிப் பயணம் குறித்து தானே கூறுவது போல செய்திகள் இடம்பெற்றுள்ளன. "நான் சந்திரயான்-2 பேசுகிறேன், விண்வெளியை நோக்கிய எனது பயணம் மிகவும் சிறப்பாக உள்ளது. என்னைப் பற்றிய புதிய தகவல் ஒன்றை உங்களிடம் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் இறங்கப்போகிறேன்" என்று சந்திராயன் விண்கலம் தெரிவித்திருப்பதாக இஸ்ரோவின் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.