2027-ல் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் : ஐ.நா. தகவல்
Aug 18 2019 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரும் 2027ம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று ஐநா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 133 கோடி மக்கள் உள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் சுமார் 138 கோடி பேர் உள்ளனர். இந்நிலையில், வரும் 2027ம் ஆண்டில் இந்திய மக்கள்தொகை சீனாவை விட அதிகரிக்கும் என்றும் எனினும் 2065ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கும் என்றும் ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவதாகவும் தென் மாநிலங்களின் பிறப்பு விகிதம் 1.8 ஆக உள்ளதாகவும், வட மாநிலங்களின் பிறப்பு விகிதம் 2.3 ஆக உள்ளதாகவும் ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.