அயோத்தி வழக்கு - அயோத்தி தூண்களில் இந்து தெய்வங்களின் உருவங்கள் : உச்சநீதிமன்றத்தில் ராம்லாலா அமைப்பு வாதம்
Aug 17 2019 2:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தூண்களில், இந்து கடவுள்களின் உருவங்கள் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ராம் லாலா அமைப்பு தெரிவித்துள்ளது.
அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த சமரசக் குழு மூலம், பிரச்னைக்கு சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, வழக்கை தினந்தோறும் நடத்தி வருகிறது. விசாரணையின் 7ம் நாளான நேற்று, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், 1950ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட தூண்களில் சிவபெருமானின் உருவங்கள் உள்ளது என ராம் லாலா அமைப்பு வாதிட்டது. இந்து தெய்வங்களின் உருவங்கள் மசூதியில் இருக்காது என்றும், கோயிலில் மட்டும்தான் இருக்கும் என்றும், எனவே, அப்பகுதி இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என்றும் லாலா சார்பில், ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.