இந்தியாவின் அணு ஆயுத கொள்கை சூழ்நிலையை பொறுத்து மாற்றப்படும் - மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி
Aug 16 2019 7:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை, சூழ்நிலையை பொறுத்து எதிர்காலத்தில் மாறலாம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய்க்கு, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். எதிரி நாடுகள் பயன்படுத்தினால், பதில் தாக்குதலுக்கு மட்டுமே அணு ஆயுதம் பயன்படுத்துவோம் என்பது இந்தியாவின் கொள்கை எனக் கூறினார். ஆனால், சூழ்நிலையை பொறுத்து எதிர்காலத்தில் இந்த முடிவு மாறலாம் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.