ஆந்திராவில் தமிழக அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து : சென்னையைச் சேர்ந்த 4 பேர் சம்பவ உயிரிழந்த பரிதாபம்
Jul 24 2019 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலம் நகரி அருகே, தமிழக அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை நங்கநல்லூரை சேர்ந்த முனி கிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காரில் சென்றனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் ஊருக்குப் புறப்பட்டபோது, நகரி அடுத்த கன்னமெட்டு என்ற இடத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பேருந்து, கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், முனி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இரண்டு பெண்கள் சிகிச்சைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து நகரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.