பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருக்கும் குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்கலாம் - மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அனுமதி
Jul 19 2019 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குல்பூஷண் ஜாதவ் மீதான வழக்கை, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் இருந்து சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றும்படி இந்தியா வலியுறுத்தியுள்ள நிலையில், ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்திய கப்பற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கு தொடர்பான விவரங்களை, வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, குல்பூஷன் பாதுகாப்பாக இருப்பதற்கும், அவரை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரவதற்கும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றவும் இந்தியா வலியுறுத்தி வருவதாக கூறினார். இதன் மூலம் திறமையான வழக்கறிஞரை நியமித்து, குல்பூஷணை குற்றமற்றவர் என்று நிரூபிக்க முடியும் என்று திரு. ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இதனிடையே, குல்பூஷண் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.