மத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 39 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது
Jul 8 2019 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. சென்செக்ஸ், 39 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.
மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், கடந்த வாரம் 5ம் தேதி, பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக, காலையில், பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. சென்செக்ஸ், 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. அதேசமயம், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. தங்கத்துக்கு வரி, பெட்ரோலிய பொருட்களுக்கு கூடுதல் வரி போன்ற அறிவிப்புகள் பங்குச்சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின.
இதனிடையே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின் பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கியது. காலை முதலே வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டது.
இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 597 புள்ளிகள் சரிந்து, 38 ஆயிரத்து 888 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தை நிஃப்டி 191 புள்ளிகள் குறைந்து, 11 ஆயிரத்து 621 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது.