வாடகைக்கு விடப்படும் பிரதமர் மோடி தியானம் செய்த கேதார்நாத் குகை : ஒரு நாள் ரூ.990
May 20 2019 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு.மோடி தியானம் செய்த கேதார்நாத் குகையில் ஒரு நாள் தங்குவதற்கு 990 ரூபாய் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்ததும், தேர்தல் முடிவுக்காக அனைத்துக்கட்சிகளும் காத்திருக்கின்றன. இந்நிலையில், திடீரென நேற்று முன்தினம் கேதார்நாத் புறப்பட்டு சென்ற பிரதமர் திரு. மோடி, அங்குள்ள பழமையான சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அங்குள்ள குகையில், காவி உடையணிந்து தியானத்தில் ஈடுபட்டார். நாடு முழுவதும் இது பரபரப்பு செய்தியானது. அவரது இந்த தியானம் 17 மணி நேரம் நீடித்தது. தியானத்தை ஊக்குவிப்பதற்காக, பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில், கேதார்நாத்தில் ஏற்கெனவே இக்குகைகள் அமைக்கப்பட்டன.
கேதார்நாத்தில் பிரதமர் திரு. மோடி தங்கி, தியானம் செய்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. தியானத்தை ஊக்குவிப்பதற்காக, பிரதமர் திரு.மோடியின் பரிந்துரைபடி, குகையில் பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.