பிரதமர் மோடியிடம் தேர்தல் கமிஷன் சரணாகதி அடைந்து விட்டது : காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
May 20 2019 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் மோடியிடம் தேர்தல் கமிஷன் சரணாகதி அடைந்து விட்டதாக காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது 'டுவிட்டர்' பக்கத்தில், தேர்தல் பத்திரங்கள், மின்னணு எந்திர வாக்குப்பதிவை அமல்படுத்தியதில் இருந்து தேர்தல் தேதியை நிர்ணயித்தது, நமோ டி.வி.யை அனுமதித்தது, மோடியின் ராணுவம் என்ற பேச்சை ஏற்றுக்கொண்டது என ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது, கேதார்நாத்தில் நடந்த நாடகம் வரை தேர்தல் கமிஷன், மோடி மற்றும் அவரது குழுவினர் முன்பு சரணடைந்து விட்டது, அனைத்து இந்தியர்களுக்கும் தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டதாக விமர்சித்துள்ளார். தேர்தல் கமிஷன், அச்சத்துடனும், மரியாதையுடனும் பார்க்கக்கூடியதாக முன்பு இருந்தது என்று கூறிய திரு.ராகுல் காந்தி, இனிமேல் அப்படி இருக்காது என குறிப்பிட்டுள்ளர்.