மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை - கூட்டணி கட்சியான சிவசேனா கருத்தால் சர்ச்சை
May 8 2019 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று அதன் முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். பா.ஜ.க. 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் திரு. மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த சூழலில், பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் திரு. ராம் மாதவ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த முறை தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறியிருந்தார். அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாரதிய ஜனதா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியும், பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது. சென்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பெற்ற இடங்களை விட, 40 இடங்கள் குறைவாகவே கிடைக்கும் என்று, சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.