வாக்களித்த பின்பு பிரச்சாரம் செய்வதைப்போல் திறந்தவேனில் பயணித்த சம்பவம் - பிரதமர் நரேந்திரமோடி மீதான புகார் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
Apr 24 2019 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று வாக்களித்த பிரதமர் திரு.மோடி, பிரச்சாரம் செய்யும் விதமாக திறந்த வேனின் பயணித்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்கு சாவடியில் நேற்று வாக்களித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, அடையாள மையிட்ட விரலை அங்கிருந்த பொதுமக்களிடம் காண்பித்தப்படி சிறிது நேரம் நடந்து சென்றார். தொடர்ந்து திறந்த வேனில் பயணித்த பிரதமர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் விதமாக கையசைத்து சென்று செய்தியாளர்களிடமும் பேசினார். இது தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கு புறம்பான செயல் என்ற புகார் எழுந்துள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்தி விளக்கம் அளிக்கும்படி குஜராத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையர் திரு.உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.