கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சுவாமி தரிசனம்
Apr 17 2019 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள கோயிலில், காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி, சுவாமி தரிசனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி, உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, திருநெள்ளி பகுதியில் உள்ள மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள ஆற்றில் தனது தந்தை ராஜீவ் காந்திக்கு, ராகுல் திதி கொடுத்தார். அப்பகுதியில்தான் ராகுல்காந்தியின் தந்தை ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.