விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு - வாகா எல்லையில் வரவேற்க திரண்ட பொதுமக்கள்
Mar 1 2019 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய விமானப்படை விங் கமேண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இன்னும் சிறிது நேரத்தில் அவர் நாடு திரும்ப உள்ள நிலையில், அட்டாரி வாகா எல்லையில் தேசியக் கொடிகளுடன் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
இந்திய ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையின் போது, இந்தியாவின் விங் கமேண்டர் அபிநந்தன் எதிர்பாராவிதமாக பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். அபிநந்தனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தின. இதனிடையே, அமைதி முயற்சியாக நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுதலை செய்வதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று அறிவித்தார்.
இதையடுத்து, விங் கமேண்டர் அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் இன்று முழு மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்ற நிலையில், இஸ்லமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
பிற்பகல் இந்தியா வருகை தரும் அபிநந்தனை வரவேற்க அவரது குடும்பத்தினர், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங், விமானப்படை உயரதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வாகா எல்லை விரைந்துள்ளனர். அபிநந்தனை வரவேற்க தேசியக் கொடிகளுடன் பொதுமக்களும் அங்கு திரண்டுள்ளனர்.