டெல்லி அரசு நடவடிக்கைகளில் யாருக்கு அதிக அதிகாரம்? - துணை நிலை ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு
Feb 14 2019 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி அரசு நடவடிக்கையில் யாருக்கு அதிகாரம்? என்பது தொடர்பான வழக்கில், நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால், தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
டெல்லியில் ஆம்ஆத்மி அரசு மற்றும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே, யாருக்கு கூடுதல் அதிகாரம்? என்பது தொடர்பாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2018-ம் ஆண்டு துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் நீதிபதி திரு.சிக்ரி, துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்றும், நீதிபதி திரு.பூஷண் டெல்லி அரசுக்கே அதிகாரம் என்றும், மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். யாருக்கு கூடுதல் அதிகாரம் என்பதில், தொடர்ந்து குழப்பம் நீடித்துவரும் நிலையில், வழக்கு 3-வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
டெல்லியை போன்றே புதுச்சேரியிலும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் திரு.நாராயணசாமி இடையே மோதல் தீவிரமடைந்து வருகிறது.