கர்நாடகாவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் - பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 4 பேர் பங்கேற்றதாக தகவல்
Jan 16 2019 3:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகிவுள்ள நிலையில், பா.ஜ.க. தொண்டர்களுக்கு நல்ல செய்தி காத்திருப்பதாக, திரு. எடியூரப்பா கூறியுள்ளதால், அங்கு உச்சக்கட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நேற்று விலக்கிக் கொண்டனர். இன்று, ஹரியானா மாநிலம் குர்கோனில் நடைபெற்ற, கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இதுதொடர்பாக அங்கு, செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில பா.ஜ.க. தலைவருமான திரு. எடியூரப்பா, பா.ஜ.க.வினர், நல்ல செய்திக்காக காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.
இது கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்கள் கூட்டணியை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக முதலமைச்சர் திரு. குமாரசாமி தெரிவித்துள்ளார். அவர்களை ஊடகங்கள்தான் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், தான் அவர்களுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும், நிலைமை சுமூகமாக இருப்பதால், கட்சியினர், கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.