கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். முயற்சி : முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
Jan 8 2019 6:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததால், கேரளாவில் போராட்டம் வெடித்து. இதனிடையே, பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன், மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா மற்றும் பிற அமைப்புகள் முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினார். மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 91 புள்ளி 71 சதவீதம் பேர் சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று சுட்டிக்காட்டினார். முழு அடைப்புப் போராட்டத்தின் போது பொது சொத்துகளைப் பாதுகாக்கவும், தனிநபர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அவசரச் சட்டம் கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளதாக திரு.பினராயி விஜயன் தெரிவித்தார்.