மிசோரமில் தோல்வி அடைந்து ஆட்சி இழந்தது காங்கிரஸ் - தெலங்கானாவிலும் கூட்டணி படுதோல்வி - தேர்தல் முடிவுகள் காங்கிரசின் எழுச்சியா ?
Dec 12 2018 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிஸோரம் மாநிலத்தில், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. மிஸோ தேசிய முன்னணிக் கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று அருதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
40 தொகுதிகளைக் கொண்டுள்ள மிஸோரம் மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸைச் சேர்ந்த முதலமைச்சர் திரு. லால் தங்வாலா, Champhai தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்துவிட்டார். மிஸோ தேசிய முன்னணிக் கட்சி 26 இடங்களிலும், பிற கட்சிகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பத்தாண்டுகளுக்குப் பிறகு, மிஸோ தேசிய முன்னணி மிஸோரம் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. வெற்றியை தொடர்ந்து மிஸோ தேசிய முன்னணிக் கட்சி தலைவர் Zoramthanga ஆளுநர் Kummanam Rajasekharan-ஐ சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.