பாரதிய ஜனதாவுடன் போட்டியிட எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை - சத்தீஸ்கர் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
Nov 12 2018 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதாவுடன் எப்படி போட்டியிட வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை என்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி நையாண்டி செய்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தல், இன்று 18 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தல், வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. 2ம் கட்ட தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் பிலாஸ்பூரும் ஒன்று. அங்கு, இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. மோடி, பா.ஜ.க. தொண்டர்கள் ஓயாது உழைத்துக் கொண்டிருப்பதாலேயே, சத்தீஸ்கரில், பாரதிய ஜனதா மீண்டும் மீண்டும் வெற்றி பெறுகிறது என்று தெரிவித்தார். பா.ஜ.க.வை எப்படி எதிர்ப்பது என எதிர்க்கட்சிகளுக்கு இதுவரை தெரியவில்லை என விமர்சித்த பிரதமர், சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுக்காக பாரதிய ஜனதா உழைப்பதாக தெரிவித்தார்.