மாவோயிஸ்ட்டுகளுக்கு மீண்டும் அடைக்கலம் கொடுக்க முயலும் காங்கிரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் - சத்தீஷ்கர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
Nov 9 2018 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாவோயிஸ்டுகளை ஒருபுறம் ஆதரித்துக்கொண்டு, மறுபுறம் அவர்களுக்கு எதிராக செயல்படுவதைப் போல் காங்கிரஸ் கட்சி நாடாகமாடுவதாக பிரதமர் திரு.நரேந்திரமோடி குற்றம்சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 12ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டி, அங்கு இன்று இறுதிக் கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. Bastar நகரில் பிரச்சாரம் செய்தபோது பேசிய பிரதமர் திரு.நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். நகர்ப்புற மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஏசி அறைகள், கார் என மிகவும் வசதியான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களது குழந்தைகள் வெளிநாடுகளில் படிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், அதே மாவோயிஸ்டுகள் இங்குள்ள ஆதிவாசி இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்வை முற்றிலுமாக அழித்துக் கொண்டிருப்பதாகவும், இவர்களை காங்கிரஸ் ஏன் ஆதரிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஒருபுறம் இவ்வாறு செய்துகொண்டு, மறுபுறம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று பேசி நாடகம் நடத்துவதாகவும் காங்கிரஸ் கட்சியினரை அவர் கடுமையாக விமர்சித்தார். எனவே வரும் தேர்தலில் இங்குள்ள மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் திரு.நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார்.