பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிப்பு - மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பெருமிதம்
Nov 8 2018 6:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜெட்லி, பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு அறிவிப்பினை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பிரதமரின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்துள்ளதாக ஆளும் பா.ஜ.க தெரிவித்து வரும் நிலையில், பணமதிபிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக எடுத்து வைக்கப்பட்ட முதல் படி என்று மத்திய நிதி அமைச்சர் திரு. அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.