பாலியல் குற்றச்சாட்டு - பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் வழக்கு
Oct 15 2018 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Me too, ஹாஷ்டாகில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் உள்ளிட்ட பல பிரபலங்கள் மீது அவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பல பெண்கள் துணிச்சலுடன் குற்றம் சாட்டி வருவதால் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டு வருகின்றன.
மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பத்திரிகை ஆசிரியாரக இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக Me too, ஹாஷ்டாகில் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்கள் குறித்து எந்த கருத்தையும் வெளியிடாமல் ஆளும் பா.ஜ.க. தரப்பு மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில் மத்திய வேளியுறவுத்துறை இணை அமைச்சர் MJ Akbar தன்மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய Priya Ramani என்ற பெண்மீது Delhi Patiala House நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.