எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
Oct 15 2018 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோலின் விலை நூறு ரூபாயை எட்டும் நிலையில் உள்ளது. இதனிடையே உள்நாட்டில் விலை உயர்வு மற்றும் சர்வதேச பெட்ரோல் நிலவரம் தொடர்பாக எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். நவம்பர் 4-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கவுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.