டெல்லியில் உள்ள வங்கியில் காசாளரைக் கொன்று பணம் கொள்ளை : கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Oct 13 2018 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தலைநகர் டெல்லியில், வங்கியில் நடைபெற்ற கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கைரா என்ற பகுதியில் உள்ள கார்ஃப்ரேஷன் வங்கியில், நேற்று கையில் துப்பாக்கியுடன் முகமூடி அணிந்தபடியே உள்ளே நுழைந்த 6 கொள்ளையர்கள், காசாளரை சுட்டுவிட்டு, வங்கியில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் படுகாயமடைந்த காசாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.