ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் நிறவெறி அவமதிப்புக்கு ஆளான பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி : பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்
Sep 24 2018 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நிறவெறி அவமதிப்புக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிட்னியில் இருந்து மெல்பேர்ன் செல்வதற்காக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சிட்னி விமான நிலையம் வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் ஷில்பா ஷெட்டியை சோதனை செய்த பெண் அதிகாரி ஒருவர், ஷில்பாவின் நிறம் குறித்து தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஷில்பாவின் உடைமைகள் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்து அவரை பயணிக்க விடாமல் தடுத்துள்ளார். இதன் காரணமாக, தான் பிடிக்க வேண்டிய விமானத்தை ஷில்பா தவறவிட்டுள்ளார். இதுகுறித்து ஷில்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்தினை பதிவு செய்துள்ளார். ஷில்பா ஷெட்டியிடம், நிறவெறி குறித்து பேசிய, ஆஸ்திரேலிய பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.