குடும்பத்தினருடன் தரிசனம் செய்த ஆந்திர முதல்வர் : பெரியசேஷ வாகன சேவை - திரளான பக்தர்கள் பங்கேற்பு
Sep 14 2018 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி மலையப்பசுவாமி பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் குடும்பத்தினருடன் பங்கேற்ற ஆந்திர முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு, ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் மாடவீதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. யானைகள், காளைகள், குதிரைகள் அணிவகுக்க, வேத மந்திரங்கள் முழங்க, பெரிய சேஷ வாகன சேவை நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று, சின்ன சேஷ வாகன சேவை நடைபெறுகிறது.