நெல்சன் மண்டேலாவின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒடிசாவில் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் : பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தத்ரூபமாக வடிவமைத்தார்
Jul 19 2018 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கருப்பர் இனப் போராளியும், தென்னாப்பிரிக்க அதிபருமான நெல்சன் மண்டேலாவின் 100-வது பிறந்ததினத்தை முன்னிட்டு, ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அவரது மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடி பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணலில் சிற்பம் செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், மண்டேலாவின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்திருந்தார். அதில் அவருக்கு 100-வது பிறந்ததின வாழ்த்தையும் சுதர்சன் பட்நாயக் பதிவிட்டிருந்தார். கடற்கரையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த மணல் சிற்பத்தை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.