முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா அக்கட்சியிலிருந்து விலகல் - பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை கண்டித்து முடிவு
Apr 21 2018 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான திரு. யஷ்வந்த் சின்ஹா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவருமான திரு. யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், தற்போதைய நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். பாரதிய ஜனதா அரசின், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து எதிர்த்து வந்த அவர், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளையும் கடுமையாக சாடினார். இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தாம் பாரதிய ஜனதாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும் திரு. யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.