டெல்லியில் தலைமை செயலாளரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது
Feb 21 2018 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் தலைமை செயலாளராக இருக்கும் அன்ஷு பிரகாஷை தாக்கிய விவகாரம் தொடர்பாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு தலைமை செயலாளராக இருப்பவர் அன்ஷு பிரகாஷ். அரசாங்கத்தின் விளம்பர செலவு அதிகரித்து வருவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது தலைமைச் செயலாளருக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையைத் தொடர்ந்து அங்கிருந்து நேராக கவர்னர் மாளிகைக்குச் சென்ற தலைமை செயலாளர், கவர்னர் அனில் பைஜாலிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் தலைமை செயலாளராக இருக்கும் அன்ஷு பிரகாஷை தாக்கிய விவகாரம் தொடர்பாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வாலை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.