அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் நவராத்திரியையொட்டி 101 அடி உயரத்திலான துர்கை அம்மன் சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது
Sep 23 2017 7:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாம் மாநிலம் கவுகாத்தியில், நவராத்திரியையொட்டி செய்யப்பட்ட 101 அடி உயரத்திலான துர்கை அம்மன் சிலை, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.
அசாம் மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடக்கும் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கவுகாத்தி நகரில் துர்கா பூஜைக்காக 101 அடியில் துர்கை அம்மன் சிலை மூங்கிலால் செய்யப்பட்டுள்ளது. அதனை புகழ்பெற்ற கலை இயக்குனர் நுரூதின் அக்மத் தலைமையிலான 44 கலைஞர்கள் கொண்ட குழு வடிவமைத்துள்ளது. மேலும், இந்த சிலை உலகிலேயே மிக உயரமான மூங்கில் சிலை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.
தற்சமயம் இந்த 101 அடி சிலை பூஜைக்காக நிறுவப்பட்டுள்ள நிலையில், வரும் 27-ம் தேதி, நான்கு நாள் பூஜை தொடங்கும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.