ஹரித்வாரில் சிறுத்தைபுலி ஒன்று தம்பதிகளை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு : பொதுமக்கள் சிறுத்தையை அடித்துக் கொன்றனர்
Mar 26 2017 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹரித்வாரில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த சிறுத்தைபுலி ஒன்று தம்பதிகளை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அந்த சிறுத்தையை அடித்துக் கொன்றனர்.
ஹரித்வாரில் உள்ள Rawli Mahdud என்ற கிராமத்தில் வசித்து வருபவர்கள் Sant Ram மற்றும் Guddi Devi. கணவன் மனைவியான இவர்கள் இருவரும் நேற்றிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென நாய் குறைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த அவர்கள் அருகில் பெரிய சிறுத்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சிறுத்தை அவர்கள் மீது பாய்ந்து கடுமையாக தாக்கியது. தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுத்தையை கடுமையாக தாக்கினர் இதில் சிறுத்தை உயிரிழந்தது. சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுத்தை உயிரிழப்பு குறித்து வனத்தறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.