ஹிமாச்சலபிரதேசத்தில் கலைஞர்கள், ஓவியர்களுக்காக நடத்தப்படும் திருவிழா : ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுரசிப்பு
Feb 25 2017 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹிமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் கலைஞர்கள், ஓவியர்களுக்காக நடத்தப்படும் Kshetriya Kalakaar Shivir திருவிழா தொடங்கியுள்ளது.இதனை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
ஹிமாச்சல் பிரதேசம் சிம்லாவில் கலைஞர்கள் மற்றும் ஓவியர்களுக்கான Kshetriya Kalakaar Shivir திருவிழா தொடங்கியுள்ளது. இதில் சிற்பக் கலைஞர்கள் பல்வேறு விதமான கடவுள்கள் போன்ற சிற்பங்களை வடிவமைத்து, பின்னர் அவை விற்பனைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஓவியப் போட்டிகளில் இயற்கைக் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இந்த போட்டிகளில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதனை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.