உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜக்திஷ் சிங் கேஹர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்
Dec 7 2016 10:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் திரு.டி.எஸ்.தாகுரின் பதவி காலம் ஆடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக திரு. ஜக்திஷ் சிங் கேஹரை நியமனம் செய்ய கோரி தற்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். நீதிபதி கேஹருக்கு வரும் ஜனவரி 4-ம் தேதி, குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக கேஹர் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.