பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வருகிற 11-ம் தேதி ஜப்பான் செல்கிறார் : பொருளாதாரம் - பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்துவார் என எதிர்பார்ப்பு
Oct 28 2016 9:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2 நாள் பயணமாக வருகிற 11-ம் தேதி ஜப்பான் செல்கிறார்.
ஜப்பானில் நடைபெறவிருக்கும் இரு நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் திரு. நரேந்திர மோடி, அடுத்த மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார். இந்த மாநாட்டின் போது ஜப்பான் பிரதமர் Shinzo Abe-வை சந்திக்கும் இந்திய பிரதமர், இரு நாடுகளுகிடையேயான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு ஆகியன குறித்து பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையே கடற்படை பயிற்சியை கூட்டாக மேற்கொள்வது மற்றும் தென்சீன கடல் விவகாரம் ஆகியன குறித்தும் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் Shinzo Abe-வும் பேச்சு நடத்தக்கூடும் என தெரிகிறது.