ஆம்புலன்ஸ் வர 6 மணி நேரம் தாமதம் : அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த பரிதாப சம்பவம்
Oct 26 2016 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தில், பேராசிரியராக பணியாற்றியவர் டாக்டர் மூர்த்தி. அவருக்கு புற்றுநோய் இருந்து வந்தது. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, அதன்மூலம் சுவாசித்து வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர 6 மணி நேரத்திற்கு மேல் காலதாமதமானதால், சிகிச்சையே செய்யப்படாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.