பீகாரில் 3 நக்சல் தளபதிகள் போலீசார் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் : மறுவாழ்வுக்கு அரசு சார்பில் உதவி
Oct 26 2016 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் மாநிலத்தில், நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த 3 தளபதிகள் போலீசார் முன்னிலையில், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்.
மேற்குவங்கம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில், நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. நக்ஸலைட்டுகளை கட்டுக்குள் கொண்டுவரவும், அவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது திடீர் தாக்குதல் நடத்துவதுடன், அவர்களின் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். தானாக வந்து சரணடையும் நக்சலைட்டுகளின் மறுவாழ்வுக்காக நிதியுதவி மற்றும் சிறுதொழில் மானியங்களும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பீகாரில் உள்ள கயாவில் 3 நக்சல் தளபதிகள், போலீசார் முன்னிலையில் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். அவர்களுக்கு மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டன.