தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ தகவல்
Oct 1 2016 2:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விண்வெளியில் கடந்த 26-ம் தேதி ஏவப்பட்ட ஸ்காட்சாட்-1 செயற்கைகோள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதில் ஒரு உபகரணம் மட்டும் 7 தினங்களுக்குப் பிறகு செயல்படும் என இஸ்ரோ தலைவர் திரு.கிரண்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மங்கள்யான் விண்கலம் சிறப்பாக செயல்பட்டு தகவல்களை அனுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, வருகிற 4-ம் தேதி ஃபிரான்சில் உள்ள ஃபிரஞ்ச் கயானா ஏவுதளத்தில் இருந்து ஜிசாட்-18 செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளது என தெரிவித்துள்ள திரு.கிரண்குமார், நவம்பர் மாதம் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான செயற்கைகோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.