சத்தீஷ்கர் மாநிலத்தில், நாசச் செயல்களை அரங்கேற்றிவந்த 13 நக்சல் தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது
Oct 1 2016 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் நக்சல் தீவிரவாதிகளை ஒடுக்க அம்மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், சத்தீஷ்கர் மாநிலம் Narayanpur மாவட்டத்தில் உள்ள Keelam கிராமத்தில், நக்சல்களின் கூட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாவட்ட காவல்துறையினர் அடங்கிய கூட்டுப் படையினர், அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையில், 13 நக்சல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், ஏற்கெனவே ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவராவார். கைது செய்யப்பட்டுள்ள 13 நக்சல் தீவிரவாதிகள் மீதும், கொலை முயற்சி, திருட்டு, வாகனங்கள் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.