ஆந்திரா-தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இயல்புநிலை கடும் பாதிப்பு - அந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் பார்வையிட்டு ஆய்வு
Sep 25 2016 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு இன்று நேரில் பார்வையிட்டார்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழை பெய்துவருகிறது. தெலங்கானாவில், ஹைதராபாத், ரெங்காரெட்டி, கம்மம், வாரங்கல் போன்ற மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகத் தெரிவதால், அங்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதேபோல், அதன் அண்டை மாநிலமான ஆந்திராவும் வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில், பேரிடர் மீட்புப்படையினர் ஏற்கெனவே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மழையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குண்டூரில் வெள்ள நிலைமையை முதலமைச்சர் திரு. சந்திபாபு நாயுடு நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் அவர் மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.