ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில், வழிகாட்டிகள் போல் செயல்பட்ட பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கைது
Sep 25 2016 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில், வழிகாட்டிகள் போல் செயல்பட்ட பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், யூரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவியவராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் யூரி பகுதியில்தான், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 4 பேர், அண்மையில், ராணுவ முகாமுக்குள்அதிகாலையில் புகுந்து மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கூட்டாக இணைந்து கூட்டாக ரோந்து பணியில் ஈடுபட்டபோது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, இருவரை கைதுசெய்து விசாரித்தனர். பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அவர்கள் இருவரும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூலம் பயிற்சிபெற்றவர்கள் என்றும் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவல் மேற்கொள்ள உதவி செய்பவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அத்துடன் அவர்களில் ஒருவர், அண்மையில் யூரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கு உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. இதனையடுத்து கைதான இருவரையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.