ராஜஸ்தான் மாநிலத்தில் கடனை திரும்ப கேட்ட நபர் தாக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு
Aug 27 2016 8:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் கொடுத்த கடனை திரும்ப கேட்க சென்ற நபர் கடுமையாக தாக்கப்பட்டார். கடன் பெற்றவர், தன்னிடம் வேலை செய்யும் நபர்களை ஏவி இத்தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் கடன் கொடுத்த நபர் படுகாயமடைந்ததையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடுத்த கடனை திரும்ப கேட்ட நபர், தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.